Thursday 30 January 2020

Pollachi Subramania Swami Temple | பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி ஆலயம்


பொள்ளாச்சியின்  பழம்பெரும்  பொக்கிஷம்    | POLLACHI’S ANCIENT TREASURE TROVE  TEMPLE

'பொழில்வாய்ச்சி' (பொழில் வாய்ந்த ஊர் - மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது) என்ற பழமையான பெயர்  கொண்ட இவ்வூர்முடிகொண்ட சோழநல்லூர்’  என்று மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில்  அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.


POLLACHI historically known as “POZHIL VAICHI”  – meaning “the land of natural greenery and prosperity” was known as ‘Mudi Konda Chola Nallur’ (Crowned King) during the period of Kulothunga Chola-III.



Epigraphic reference can be found in the temple walls of ‘Pollachi SUBRAMANYA SWAMI TEMPLE’, which was earlier built as ‘THIRU AGATHEESWARAMUDAYAR TEMPLE’ dedicated to Shiva during the period of Vikrama Chola and later by Sundara Pandian who ruled Kongu region in 12th-13th century.

கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன், பின் சுந்தர பாண்டியன் காலத்தில் (12-13 ஆம் நூற்றாண்டு) திருப்பணி செய்யப்பட்ட ‘திரு அகத்தீஸ்வரமுடையார்’ சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாக புகழ் பெற்றது.

இங்கு யாழியின் வாயிலிருந்து தொங்கும் ஒரே கல்லிலான கற்சங்கிலி, 12 இராசிகளின் வடிவங்கள் கொண்ட மேற்கூரை வியக்கும் வண்ணம் சிற்ப நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

The shrine of Sundareswarar and Mother Meenakshi (Original Temples of Chola & Pandya period) on the south of Subramanya shrine with 24 pillared hall contains stone carvings  of  Yali with a monolithic Stone chain from its mouth and zodiac  signs on the Roof.



தடாதகைப்பிராட்டியார் - மும்முலை அம்மன்:
ஸ்ரீ மீனாக்ஷி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம்  செல்லும் ஒர் அரிய  சிற்பம் இவ்வாலயத்தூணில் அழகுற அமைக்கப் பட்டுள்ளது.
 
Thadathagai Pirattiyar with Three Breasts :
A rare sculpture Depicting Meenakshi as 'Thadathagai Pirattiyar' going on Tripura Vijayam. When she encounters Lord Shiva her third breast disappears.

 'ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்தவெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள்.'

'கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்.'


- திருமணப் படலம்  - திருவிளையாடல் புராணம் 

Saints Thirugnana Sambandar, Appar, Sundarar, Manickavasagar, Nataraja, Kamadenu pouring its milk on Shivalinga, Kannappa Nayanar and Dasavatharas were artistically depicted in the pillars.

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், தசாவதாரக் காட்சிகள் கொண்ட சிற்பத்தூண்கள் சுந்தரேஸ்வரர், மீனாட்சி சன்னதிகள் முன் உள்ள 24 தூண் மண்டபத்தில் எழிலுற அமைந்துள்ளன.







'பொழில்வாய்ச்சி'  என்ற பெயர் கூறும்  கல்வெட்டு அமைந்துள்ள ‘பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின்’ குடமுழுக்கு விழா இன்று (30-01-2020) சிறப்புற  நிகழவுள்ளது.

 Consecration ceremony for this ancient temple is performed today (30-01-2020).

#pollachi #pozhilvaichi #பொழில்வாய்ச்சி #பொள்ளாச்சி #SubramanyaTemple #StoneChain #zodiacsigns #மீனாட்சி #Meenakshi #Thadathagai
#தடாதகைப்பிராட்டி

  

16 comments:

  1. அற்புதம்.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அற்புதம். பொள்ளாச்சியின் கலைப் பெருமையினை உலகறிய வைத்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சோழர்களும்,பாண்டியர்களும் நிர்மாணித்து தொடர்பணியின் மூலம் கொங்கு மண்ணின் அற்புதக்கலைப்படைப்புகளில் ஒன்றாக பல நூற்றாண்டுகளாக இம்மண்ணிற்கு பெருமை சேர்க்கும் பொள்ளாச்சி அருள்மிகு.சுப்ரமணிய ஸ்வாமி கோவில் பற்றியும்,சிற்பங்களின் கலைநயத்தையும் மிக சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ள தங்கள் அரும்பணிதொடர நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. Very informative Anna. Keep it up. We expect more from you.

    ReplyDelete
  5. அருமைங்க. நம்ம ஊர் கோவிலை பற்றி பல தெரியாத விஷயங்களை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து அளித்துள்ளீர்கள். இனி சுப்ரமணிய சுவாமி கோவில் சென்றால் அதன் அற்புதங்களை இன்னும் நன்றாக உணரலாம். நன்றிங்க. வாழ்த்துகள். 🙏

    ReplyDelete
  6. அருமையான தகவல்...
    பொழில்வாய்ச்சி அற்புதமான ஊர் பெயர்...

    ReplyDelete
  7. பொள்ளாச்சி மக்களே அறிந்திராத அற்புதமான தகவல்கள்.

    அருமை...அருமை..

    ReplyDelete